வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள்

மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நீர்தேக்க நிலையைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் அல்-மூனீர் பாடசாலையைச் சுற்றியுள்ள வடிகான்கள் மற்றும் ஜமாலியா பள்ளிவாசல் பிரதேச வடிகால்களில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் மண்கள் பிரதேச சபையின் ஊழியர்களினால் அகற்றப்பட்டது.

மேலும், அல்-மூனீர் பாடசாலை வடிகானில் நீண்டகாலமாக காணப்பட்ட பாரிய கல்லொன்று பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு வடிகான் சுத்தம் செய்யப்பட்டது.