அஸ்ஸலாமு அலைக்கும்

சம்மாந்துறை வாழ் முஸ்லிம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
1.2026 மே மாதம் 28ம் திகதியும் 29ம் திகதியும் மாத்திரம் உழ்ஹிய்யாக் கடமைக்காக மாடுகளை அறுப்பதற்கு அனுமதியளிக்கப்படும்.
2.எதிர்வரும் 2026.05.30,31 மற்றும் 2026.06.01 ஆகிய 03 தினங்களும் வெசாக் வாரத்திற்குள் அடங்குவதனால் மேற்படி 03 தினங்களிலும் பிராணிகளை அறுப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
3.அறுக்கப்படும் கால்நடைகளின் கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எமது சுற்றாடலை மாசுபடுத்தாமல் கீழ்வரும் இடங்களில் 2026.05.28, 2026.05.29 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ள உழவு இயந்திரப் பெட்டிகளில் இடுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
1. அலவக்கரை வீதி பெரிய பள்ளிவாசல் - பின் வீதி
2. அலவக்கரை MPCS மில் அருகாமை - புதுப் பள்ளிக்கு பின்புறம்
3. ஆண்டி சந்தி சமீட் புரம் வீதி
4. முகைடீன் மாவத்தையில் செட்டியா வட்டைச் சந்தி
5. மல்கம்பிட்டி வீதியில் கைகாட்டிச் சந்தி (பழைய விலங்கறுமனை அருகில்)
6. சேகலயர் வண்டு இறைச்சிக் கடைக்கு அருகாமை
7. ஹிஜ்றா சந்தி
4. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சூழல், சுற்றாடல் சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.
5. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.