சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா
சம்மாந்துறை பிரதேச சபையின் அனுசரணையுடன் புதிய வளத்தாப்பிட்டியில் சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா நேற்று மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலையம், வாரணம் நற்பணி ஒன்றியம், நியூ லைப் அமைப்பு, வீனஸ் விளையாட்டு கழகம், உதவும் கரங்கள் அமைப்பு, MYDEEP இளைஞர் செலனி, நண்பர்கள் ஒன்றியம், அறம் அமைப்பு மற்றும் புதிய வளத்தாப்பிட்டி பொதுமக்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான வீ.ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ.வினோகாந்த், சம்மாந்துறை சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எல்.எம்.ஜிப்ரி, ஏ.எச்.எம்.காலித், சீ.டனோஜன், எம்.ஆர்.ஆசிக் முஹம்மட், எம்.ஐ.எம்.றிஸ்விகான், எஸ்.எல்.எம்.பஹூமி, ஏ.சீ.எம்.நயீம், வை.பீ.எம்.நபாஸ், ஏ.சதானந்தா, எஸ்.எல்.ஏ.நஸார், எம்.எல்.ஏ.கபூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் என்பன நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.























0 Comments