சம்மாந்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும், அவசியமான பாதுகாப்பு சாதனங்களும் வழங்கி வைக்கப்பு

சம்மாந்துறை பிரதேச சபையின் மின்சார பிரிவை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் மின்சார ஊழியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும், மின்சாரப் பணிகளில் ஈடுபடும் போது அவசியமான பாதுகாப்பு சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், மின்சார பிரிவு ஊழியர்களிடம் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு விரைவான சேவையை வழங்குவதற்காக இவ்வுபகரணங்கள் வழங்கப்படுவதாக தவிசாளர் கூறிப்பிட்டதுடன் மேலும், மின்சார பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சேவையின் திறனை அதிகரிப்பதற்கும் இந்நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.