"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்"
உள்ளூராட்சி வாரம் 2025
பொதுப் பயன்பாட்டு தினம்

"வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, பொதுப் பயன்பாட்டு தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் முஹல்லா மஹல்லா மையவாடி, கோரக்கோயில் இந்து மயானம், தைக்கா பள்ளிவாசல் மையவாடி ஆகியன இன்று சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மேசன் சங்க உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கோவில் நிர்வாகத்தினர், பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் சிரமதானத்தில் பங்கேற்றனர்.