உள்ளூராட்சி வாரம் - 2025

“வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்”
“மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டம்
சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம்


“வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” என்ற தொனிப்பொருளின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாவது நாளாக சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை ஆலையடிவட்டை மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் ஞாபகர்த்த பொது மைதானத்தின் சுற்றுப்புறத்தை பசுமையமாக்கும் நோக்கில், மரநடுகையின் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், சுற்றாடல் திணைக்கள பிரதிநிதிகள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
உள்ளிட்ட பலரும் பங்கேற்றி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வேலைத்திட்டம் அரச திணைக்களங்கள், சிறுவர் பூங்காக்கள், மைதானங்கள், மையவாடிகள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் இடம்பெற்றது.