கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், ஜமாலியா வித்தியாலய அபிவிருத்திக்கான குழுவினருக்குமிடையிலான சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், ஜமாலியா வித்தியாலய அபிவிருத்திக்கான குழுவினருக்குமிடையிலான சந்திப்பு, இன்று திங்கட்கிழமை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பின்போது, பாடசாலையின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தல், வசதிகளின் அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஜமாலியா வித்தியாலய அதிபர் ஏ.எம். றிஸ்வான், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.