PSDG திட்டத்தின் கீழ் வீதி செப்பனீட்டும் வேலைத்திட்டம்

கிழக்கு மாகாண சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வன்னியார் வீதி கொங்க்ரீட் இடப்பட்டு செப்பனீட்டும் வேலைத்திட்டத்தினை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்கள் கலந்துகொண்டார்.