வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள்

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய, வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, மதீனா உம்மா வீதி வடிகான் பிரதேச சபையின் கனரக இயந்திரம் மற்றும் ஊழியர்கள் மூலம் நேற்று வியாழக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மாஹிர் அவர்கள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், கௌரவ உறுப்பினர் எஸ்.எல்.ஏ. நஸார், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.