வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள்
மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய, வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய அம்பாரை 9ஆம் வீதி வடிகான் சபையின் ஊழியர்களினால் இன்று திங்கட்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. இப்பணிகளை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எச்.எம். காலித், எம்.ஆர் ஆசிக் அஹம்மட், எம்.ஐ.எம்.றிஸ்விஹான் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனைகளையும் வழங்கினார்.
0 Comments