நெய்னாகாடு பிரதேசத்திற்கு கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் நேரில் விஜயம்
நெய்னாகாடு பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் இன்று திங்கட்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்டார்
இதன்போது றகுமானியா வீதி, விரயடி அனைக்கட்டு வீதி (பட்டம்பிட்டி வீதி), அல்-பலாஹ் பள்ளிவாசல் ஆகிய வீதிகளை பார்வையிட்டு, பொதுமக்களின் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகளை கேட்டறிந்தார்.
அறுவடை முடிவடைந்த நிலையால், யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி மற்றும் பழுதடைந்த மின் விளக்குகளை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், நெய்னாகாடு ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் விஜயம் மேற்கொண்டு தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.




























0 Comments