வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள்

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் பணிப்புரைக்கமைய, பிரதேசத்தின் முக்கிய இடங்களில் உள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய சீனி விதானை வடிகான் (புதுப் பள்ளிவாசல் பிரதேசம்) வடிகான், பிரதேச சபையின் கனரக வாகனம் மற்றும் ஊழியர்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டது.இப்பணிகளை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் எஸ்.எல்.எம். பஹுமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனைகளையும் வழங்கினார்.