இயற்கை கழிவகற்றல் சுத்திகரிப்பு நிலையத்தை, கௌரவ தவிசாளர் நேரில் பார்வையிட்டார்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சம்மாந்துறை இயற்கை கழிவகற்றல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது நிலையத்தின் செயற்பாடுகள், தற்போதைய நிலை மற்றும் சேவையின் தரம் குறித்தும், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபாவிடம் கேட்டறிந்து கொண்டார்.
பிரதேச சபையினால் சேவைக் கட்டண அடிப்படையில் சேகரிக்கப்படும் இயற்கை கழிவுகள், இந்நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான நீராக மாற்றப்பட்டு வெளியேற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது.