சம்மாந்துறை பிரதேச விளையாட்டுக்கழக பிரதிநிதிகளுக்கும் கெளரவ தவிசாளர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச விளையாட்டுக்கழக பிரதிநிதிகளுக்கும் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஏ.சீ.எம். நயீம், எஸ்.எல்.எம். பஹுமி, ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர்.ஆசிக் முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.சுலேக்சன் மற்றும் எம்.ரீ.எம்.றிஸா உள்ளிட்ட விளையாட்டுக்கழக பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது விளையாட்டுக் கழகங்கள் எதிர்நோக்கும் மைதானங்கள் சம்பந்தமான பிரச்சினைகள், விளையாட்டு வீரர்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.