பொதுத் தேவைக்காக பயன்படுத்தக்கூடிய நிலங்களை அடையாளம் காணும் நோக்கிலான கள விஜயம்

பொதுத் தேவைக்காக பயன்படுத்தக்கூடிய நிலங்களை அடையாளம் காணும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (22) கள விஜயம் மேற்கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆகியோர், பிரதேசத்தில் மக்களின் பொதுத் தேவைக்காக பயன்படுத்தக்கூடிய நிலங்களை அடையாளம் காணும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (22) கள விஜயம் மேற்கொண்டனர்.

இதன் போது சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.