இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் சேவையினை பாராட்டி கௌரவப்படுத்தும் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் சேவையினை பாராட்டி கௌரவப்படுத்தும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (2025.02.27) அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிதி உதவியாளர் ஏ.ஜெ.எம்.ஜெசீல், வருமான பரிசோதகர் எஸ்.ஏ.எச்.எஸ்.யஹியா ஆகியோர்களின் சேவையினை பாராட்டி வாழ்த்து கூறி கௌரவிக்கப்பட்டனர்.