Amusement Park - உள்ளக சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா

சிறுவர்களின் உளவளத்தை செழிப்புர செய்வதற்கும், பொழுதுபோக்கு மேம்பாட்டுக்காவும் உலக வங்கியின் நிதி உதவியுடன் உள்ளூர் அபிவிருத்தி உதவி செயற்திட்டத்தின் (LDSP) கீழ் சுமார் 31 மில்லியன் ரூபாய் செலவில் சம்மாந்துறை பிரதேச சபையினால் ஆலையடிச் சந்தை கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள (Children Amusement Park) சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா நேற்று சிறுவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறுவர் பூங்காவினை திறந்து வைத்தார்.
அம்பாரை மாவட்டத்தில் முதல்முறையாக உள்ளக அரங்கில் அமையப்பெற்ற இப் பூங்காவில் புகையிரம் சவாரி, இலக்ரிகல் கார் சவாரி போன்ற விளையாட்டுக்கள் அமையப்பெற்றிப்பது சிறப்பம்சமாகும்.
இதன்போது பசுமை பூங்காவாக மிளிரச் செய்யும் வகையில் வளாகத்தில் அதிதிகளினால் மர நடுகையும் இடம் பெற்றது.
இதில் உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் (LDSP) அம்பாரை மாவட்ட திட்ட பொறியிலாளர் பீ. அச்சுதன், தேசிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் சட்டத்தாணி றிஷாட் எம்.புஹாரி, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் ஐ.எம்.ஹனீபா, சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா பொதுச்செயலாளர் எம்.எல்.எச்.ஜெளபர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆய்வு உத்தியோகத்தர், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.