தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) சம்மாந்துறை பிரதேச சபையிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாலய இரண்டாம் மொழி சிங்கள மொழி பயிற்சி நெறியை கடந்த வாரம் பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு நேற்று சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இரண்டாம் மொழி சிங்கள மொழி பயிற்சி நெறியை சம்மாந்துறை பிரதேசத்திலேயே பயிற்சி நெறியை கற்பதற்கு ஏற்பாடு செய்து தந்தமைக்கு செயலாளருக்கு பயிற்சி நெறியை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் இதன் போது நன்றிகளை தெரிவித்தனர்.